Monday, April 15, 2013

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:)

 
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அல்லாகே அந்தரிகி யூகாதி சுபகாஞ்சலு

என்னது? சுபா அக்காவுக்கு காய்ச்சலா?

ஆமா டெங்கு காய்ச்சல்

ஒ.. எந்த சுபா? நம்ம மன்னார்குடி சுபாவா?

இல்ல மால்குடி சுபா

ஹையோ ஹையோ அது மால்குடி இல்ல மால்காடி, அப்படினா ஹிந்தில சரக்கு ரயில்னு அர்த்தம், சுபா சரக்கு ரயில் பத்தி ஒரு பாட்டு பாடி பேமஸ் ஆனதுனால அந்த பேர் வந்தது

இதெல்லாம் சரியா சொல்லு, ஆனா நான் தெலுகுல ஒரு வார்த்தை சொன்னது உனக்கு புரியலையா?

அ...அது... சுபா அக்காவுக்கு காய்ச்சல் பத்தி கிளாஸ் எடுத்த அன்னைக்கி எனக்கும் காய்ச்சல். அதான் அது மட்டும் தெரியாம போச்சு

நல்லாவே சமாளிக்கற. என்ன பிரெண்ட்ஸ்? நான் யார் கூட பேசிட்டு இருக்கேன்னு புரியலையா? வேற யாருங்க, டாங்கி கெட்டா ஸ்மால் வால்...:)

அப்பாவி ப்ளீஸ்... உன்னை நீயே கழுதைனு சொல்லிக்கறத என்னால அனுமதிக்க முடியாது

உஸ்ஸ்ப்ப்ப்பா... முடியல மைண்ட்வாய்ஸ் முடியல

அப்பாவி, நமக்குள்ள ஆயிரம் தான் இருந்தாலும்....

எந்த ஆயிரத்த சொல்ற, போன வாரம் கடன் வாங்கினியே அந்த ஆயிரமா? இல்ல போன மாசம் வாங்கினயே அந்த நாலாயிரமா?

அப்பாவி, ஓராயிரமோ, நாலாயிரமோ, வாரணமாயிரமோ... அதெல்லாம் இப்ப எதுக்கு? இப்ப இங்க வந்த மேட்டர் சொல்லு

மேட்டர் என்னனு தெரியணுமா பிரெண்ட்ஸ்... சிரமம் பாக்காம கொஞ்சம் இங்க வந்து பாருங்களேன். தேங்க்ஸ்...:)

Saturday, March 23, 2013

ஜோசியம் பாக்குலியோ ஜோசியம்...:)

 
 
 
அப்பாவி : கிளிகார் கிளிகார்... கொஞ்சம் இப்படி வாங்க
 
கிளிஜோசியர் : கூப்ட்டீங்களா?
 
அப்பாவி : பின்ன கூப்டாமையே வர்றதுக்கு நீங்க என்ன சுனாமியா?
 
கி.ஜோ : எதுக்கு கூப்ட்டீங்க?
 
அப்பாவி : ஒரு நாலு கிலோ பச்சரசி வேணும்
 
கி.ஜோ : அதுக்கு எதுக்கு என்னை கூப்ட்டீங்க?
 
அப்பாவி : உங்களை எதுக்கு கூப்டுவாங்கன்னு தெரியுமல்ல, அப்பறமென்ன எதுக்கு கூப்ட்டீங்கன்னு ஒரு கேள்வி
 
கி.ஜோ :கெரகம் இன்னைக்கி யார் மூஞ்சில முழிச்சனோ (என முணுமுணுக்க)
 
அப்பாவி : இந்த கிளி ஜோசியம் சொல்லுமா?
 
கி.ஜோ : இல்ல ஆபரேசன் பண்ணும்
 
அப்பாவி : என்னது?
 
கி.ஜோ : நீங்க மட்டும் தான் எடக்கு மடக்கா பேசுவீகளா?
 
அப்பாவி : ஹ்ம்ம்... நேரம் தான். சரி சரி உங்க கிளிய என்ர பேருக்கு ஒரு சீட்டு எடுக்க சொல்லுங்க
 
கி.ஜோ : நீங்க என்ன நம்ம ஜில்லா கலக்டரா? பேரு சொல்லுங்க அம்மணி
 
அப்பாவி : ஹ்ம்ம்... டயமே சரி இல்ல. என்ர பேரு அப்பாவி
 
கி.ஜோ : நெசமாலுங்களா?
 
அப்பாவி : அப்படி என்ன நம்ப முடியாத விஷயம் நான் இப்ப சொல்லிட்டேன்?
 
கி.ஜோ : அதில்லீங்... ஆளுக்கும் பேருக்கும்... சரி சரி... உங்க பேரு உங்க பாடு. ஸ்ரேயா கண்ணு, கொஞ்சம் வெளிய வாம்மா (என பேச்சை மாற்ற)
 
அப்பாவி : ஸ்ரேயாவா? எங்க வீட்ல அப்படி யாரும் இல்லையே
 
கி.ஜோ : உங்கூட்ல இல்லீங்க... என்ர கூண்டுல இருக்குதுங்க... ஸ்ரேயா கிளி பேருங்க
 
அப்பாவி : என்னது கிளி பேரு ஸ்ரேயாவா? அநியாயமா இல்ல
 
கி.ஜோ : என்னங்க அம்மணி, நீங்க அப்பாவினு பேரு வெச்சுக்கலாம், என்ர கிளிக்கு ஸ்ரேயானு வெச்சா தப்பா?
 
அப்பாவி : எனக்கு நேரம் எப்படி இருக்குனு கேக்கதான் கூப்ட்டேன். அது எந்த லட்சணம்னு உங்ககிட்ட பேசினதுலையே தெரிஞ்சு போச்சு, சரி நடைய கட்டுங்க
 
கி.ஜோ : அட என்னங்க அம்மணி இதுக்கு போய் சடஞ்சுக்கறீங்க. நீங்க ரெண்டு வார்த்த பேசுனீங்க, நானும் பேசுனேன் அம்புட்டு தான? சரி ஸ்ரேயா உங்களுக்கு என்ன சீட்டு எடுத்து இருக்குனு பாருங்கம்மணி
 
அப்பாவி : என்ன சீட்டு? (என ஆர்வமாய் கேட்க)
 
கி.ஜோ : ஆஹா... பேஷ் பேஷ்
 
அப்பாவி : இங்க என்ன நரசூஸ் காப்பி விளம்பரமா ஓடுது
 
கி.ஜோ : அதில்லீங் அம்மணி. நம்ம பத்திரகாளி ஆத்தாவே வந்திருக்கு உங்க சீட்டுல
 
மைண்ட்வாய்ஸ் : ஆஹா என்ன பொருத்தம்
 
அப்பாவி : என்ன? (என முறைக்க)
 
மைண்ட்வாய்ஸ் : ஹி ஹி ... கே.டிவி'ல இன்னைக்கி "ஆஹா என்ன பொருத்தம்" படம் போடறான்னு பேசிக்கிட்டாங்க
 
கி.ஜோ : அம்மணி, இனி எல்லாம் நல்லாதாவே நடக்கும்
 
அப்பாவி : என்ன நல்லது?
 
கி.ஜோ : உங்கள பிடிச்சுருந்த கெட்ட கெரகமெல்லாம் ஓடியே போய்டும். ஆத்தா கைல இருக்கற ஆயுதங்கள் எல்லாத்தையும் அழிச்சிடும்
 
அப்பாவி : அதெல்லாம் இருக்கட்டும், இந்த வருசமாச்சும் கொஞ்சம் பல்பு வாங்காம இருப்பனானு சொல்லுங்க
 
கி.ஜோ : வெளிச்சம் வேணும்னா பல்பு வாங்கி தானேங்க ஆகோணும்
 
மைண்ட்வாய்ஸ் : ஹ ஹ ஹ... முடியல அப்பாவி முடியல. இதை விட பெரிய பல்பு வேணுமா?
 
அப்பாவி : எல்லாம் என் நேரம்
 
கி.ஜோ : உங்க நேரம் அமோகமா இருக்குதுங்கம்மணி
 
அப்பாவி : என்னத்த நல்லா இருக்குது? பொரி விக்க போனா காத்தடிக்குது, உப்பு விக்க போனா மழை பெயுது
 
கி.ஜோ : பொரி விக்கரீங்களா? எனக்கு ஒரு ரெண்டு பக்கா போடுங்கம்மணி. என்ற ஊட்டு அம்மணி பசங்களுக்கு லீவு மறக்காம பொரி வாங்கிட்டு வா மாமோய்'னு காலம்பரமே சொல்லிச்சு
 
அப்பாவி : அட ஒரு பேச்சுக்கு சொன்னனுங்க. நான் பொரியும் விக்கல உப்பும் விக்கல
 
கி.ஜோ : ஓஹோ... நீங்க வெசனப்படாதீங்க அம்மணி, ஆத்தா காட்சி குடுத்துட்டா இனி எல்லாம் நல்லாவே நடக்கும்
 
அப்பாவி : சரி சரி, என் எதிர்காலத்த பத்தி உங்க ஜோசியம் என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் சொல்லுங்க
 
கி.ஜோ : அதுக்கென்னங்க... இனி பதினஞ்சு நாளைக்கப்புறம் உங்க சொல் பேச்சு எங்கயும் எடுபடும்
 
மைண்ட்வாய்ஸ் :அடிபடாம இருந்தா சரி
 
அப்பாவி : (மைண்ட்வாய்சை முறைத்து விட்டு கி.ஜோ'விடம்) நீங்க மேல சொல்லுங்க
 
கி.ஜோ : ரெம்ப நாளா விட்டு போன ஒரு வேலைய இனி தொடர்ந்து செய்யலாம்னு முடிவு பண்ணி இருப்பீங்க. அது நல்லாவே நடக்கும்
 
அப்பாவி : அட, நான் ப்ளாக்'ல ரீ-என்ட்ரி ஆகறது உங்களுக்கெப்படி தெரியும்
 
மைண்ட்வாய்ஸ்: (மனதிற்குள்) இதான் எங்கூர்ல போட்டு வாங்கறதுனு பேரு. ஹ்ம்ம்... ரீ-என்ட்ரியாமா? அரவிந்த்சாமி கூட "கடல்"ல ரீ-என்ட்ரி ஆனத பத்தி இவ்ளோ பீலா விட்டு இருக்கமாட்டாரு
 
கி.ஜோ : ப்ளாக் க்லீக் எல்லாம் நமக்கு தெரியாதுங்க. ஜோசியம் சொல்றத நான் சொல்றேன்
 
அப்பாவி : வேற என்ன சொல்லுது உங்க ஜோசியம்
 
கி.ஜோ : உங்களுக்கு உத்தியோக யோகம் இருக்குதுனு ஜோசியம் சொல்லுதுங்க
 
அப்பாவி : வாவ்... எனக்கு வேலை கிடைச்ச மேட்டர் கூட உங்க ஜோசியம் சொல்லுதா.... வொண்டர்புல்
 
மைண்ட்வாய்ஸ் : ரியலி? வேலை கிடைச்சுடுச்சா, சொல்லவே இல்லையே அப்பாவி. அதான் ரெண்டு மாசமா பிஸியா நீ?
 
அப்பாவி : வேலை கிடைச்சுடுச்சு, ஆனா அதனால பிஸி இல்ல
 
மைண்ட்வாய்ஸ் : அங்கயும் வெட்டியாதான் இருக்கியா அப்ப
 
அப்பாவி : அட அதில்ல, வேலை கிடைச்சுடுச்சு, ஆனா இப்போதைக்கு போக வேண்டியதில்ல
 
மைண்ட்வாய்ஸ் : புரியும் ஆனா புரியாது'னு உன் ப்ளாக் பேரை மாத்திக்கோ
 
அப்பாவி : நோ டென்சன் மைண்ட்வாய்ஸ். என்ன விசயம்னா, ஒரு காலேஜ்ல வாத்தியாரம்மா வேலை கிடைச்சு இருக்கு, ஆனா அடுத்த அகடமிக் இயர் தான் ஜாயின் பண்ணனும். அது MBA காலேஜ்'ங்கரதால கவுன்சலிங் எல்லாம் முடிஞ்சு ஆகஸ்ட் மாசம் தான் ஆரம்பிப்பாங்க. அப்ப வேலைக்கு போனா போதும்
 
மைண்ட்வாய்ஸ் : ஐயோ பாவம் யாரோ பெத்த புள்ளைங்களோ. ஆனா பேசியே கொல்ற வேலை, உனக்கு பொருத்தம் தான். அது சரி, எந்த காலேஜ் அது?
 
அப்பாவி : அஸ்கு புஸ்கு, அதெல்லாம் பப்ளிக்கா சொல்லி சொ.செ.சூ வெச்சுக்க நான் தயாரா இல்லை
 
மைண்ட்வாய்ஸ் : ஆஹா, சுதாரிச்சுட்டியே... வேலைக்கும் போகலயில்ல, அப்புறம் ஏன் மூணு மாசமா போஸ்டே காணோம்?
 
அப்பாவி : அதையேன் கேக்கற, வேலைக்கு போனா கூட இவ்ளோ பிஸியா இருக்க மாட்டோம் போல இருக்கு. சும்மா தான இருக்க வா போலாம்'னு எல்லா வேலைக்கு இழுத்துட்டு போயிடறாங்க மக்கள். அதான் வேலைக்கு போனா கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்
 
கி.ஜோ : அம்மணி, வேற எதாச்சும் கேக்கோனுங்களா, இல்லாட்டி போனா நான் உத்தரவு வாங்கிக்கரனுங்க
 
அப்பாவி : இருங்க இருங்க, அதுக்குள்ள என்ன அவசரம்... ஏதோ உலகம் அழியும்னாங்க, இல்லைனாங்க. அதைப்பத்தி உங்க கிளி என்ன சொல்லுது
 
கி.ஜோ : எங்க ஸ்ரேயாவுக்கு மனுசங்க ஜோசியம் தான் தெரியுமுங்க, உலக ஜோசியமெல்லாம் இல்லீங்க
 
அப்பாவி : அதாவது உங்க ஸ்ரேயாவுக்கு இது அவுட் ஆப் சிலபஸ்'னு சொல்றீங்க. சரி சரி
 
கி.ஜோ : அது என்னமோங்க.... ஆனா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றனுங்க
 
அப்பாவி : ரகசியமா? சொல்லுங்க சொல்லுங்க
 
கி.ஜோ : மார்ச் 31ந் தேதி உலகம் அழிய போகுதுங்களாமா
 
அப்பாவி : இதென்ன புதுக்கதை?
 
கி.ஜோ : கதை இல்லீங்க. விசயம் கேள்விபட்டதும் நான் அவசர அவசரமா பணத்தை எல்லாம் கொண்டு போய் பத்திரமா பேங்க்ல போட்டுட்டு வந்தனுங்க
 
அப்பாவி : அட ராமா... உலகம் அழியும் போது பேங்க் மட்டுமென்ன நிலாவுல போயா உக்காந்துக்கும். அதுவும் சேந்து தான்யா அழியும்
 
கி.ஜோ : அதெல்லாம் ஓண்ணும் ஆவாதுங்கம்மணி. இப்படி தான் ஒரு பதினஞ்சு வருஷம் முன்ன பொரளி கெளப்பி உட்டாங்க. நானும் உலகம் தான் அழிய போகுதேனு இருந்த பணமெல்லாம் செலவழிச்சு போட்டேன். அன்னைக்கி கோவிச்சுகிட்டு ஆத்தா ஊட்டுக்கு போனவ தான் என்ர பொண்டாட்டி...ஹ்ம்ம்... எம்புட்டு நாள் கழிச்சு இப்பதான் வந்திருக்கா
 
அப்பாவி : அடடே... ரெம்ப சோக கதையா இருக்கே. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, உங்க சொந்த கதைய கருவா வெச்சு என் ப்ளாக்ல ஒரு கதை எழுதிக்கட்டுமா?
 
மைண்ட்வாய்ஸ் :அதானே... என்னடா இன்னும் நம்ம அப்பாவியோட கற்பனை குதிரை புறப்படலியேனு நெனச்சேன்
 
கி.ஜோ : நீங்க சோக்கடிக்கரீங்க, நான் நெசமாத்தான் சொல்றனுங்க அம்மணி, உலகம் 31ந்தேதி அழியுதுங்க
 
அப்பாவி : யார் சொன்னாங்க உங்ககிட்ட?
 
கி.ஜோ : அதுங்க, போன வாரம் அண்ணா நகர்ல இருக்கற ஒரு பேங்க் ஆபிசர் ஊட்டுக்கு ஜோசியம் சொல்ல போய் இருந்தனுங்க. அந்த அய்யா போன்ல யார்கிட்டயோ "இயர் எண்டு மார்ச் 31, அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடும்"னு சொல்லிட்டு இருந்தாருங்க
 
அப்பாவி : வேணாம்.... அழுதுருவேன்...
 
கி.ஜோ : அழுவாதீங்க அம்மணி, எல்லாருக்கும் நடக்கறது தானுங்க நமக்கும் நடக்கும். உங்களுக்கு சீட்டுல வந்திருக்கற பத்திரகாளியாத்தா காப்பாத்துவா
 
அப்பாவி : பொரளி எங்க இருந்தெல்லாம் ஆரம்பிக்குதுனு பாருங்க மக்களே... இதையெல்லாம் நம்பி இனி என்ன கலவரம் வெடிக்க போகுதோ.... ஹ்ம்ம் 
:))
 
 

Saturday, December 29, 2012

கண் பேசும் வார்த்தைகள்... (சிறுகதை)




இதை பிரசுரித்த வல்லமை இதழுக்கு நன்றிகள்
___________________________________
 
"என்னங்க, நெக்ஸ்ட் வீக் எங்க சித்தப்பாவும் சித்தியும் அவங்க பொண்ணுக்கு மாப்ள பாக்கற விஷயமா ஊர்ல இருந்து வராங்க. நாமளும் கூட போகணும், லீவ் சொல்லிடுங்க" என்றவள் கூற

"ஐயையோ... புதன்கிழமையா மட்டும் இருக்கக்கூடாது கடவுளே" என வேண்டியபடியே "எப்போ?" என்றான்

"புதன்கிழமை" என குண்டை வீசினாள்

"ஓ நோ... எனக்கு புதன்கிழமை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவ் போட முடியாது" என்றான்

"ஆமா... எங்க வீட்டு சொந்தம் வராங்கனு சொன்னாலே உங்களுக்கு மீட்டிங், டெட்லைன், கோ-லைவ் எல்லாம் வந்துடும்" என சண்டையை துவங்கினாள்

"ஏன் புரியாம பேசற? நீயும் வேலைக்கு போறவ தான, தெரியாதா?" என புரியவைக்க முயன்றான்

"போன மாசம் உங்க அக்கா வந்தப்ப மட்டும் மூணு நாள் லீவ் போட்டீங்க, என்னையும் போட வெச்சீங்க. எனக்கு கூட தான் வேலை இருந்தது, உங்களுக்காக செய்யலையா?"

"எங்கக்கா ரெண்டு மாசம் முன்னாடியே வர்றத பத்தி இன்பார்ம் பண்ணினா, சோ பிளான் பண்ண வசதியா இருந்தது" என நியாப்படுத்தினான்

"ஓஹோ... உங்க சொந்தமெல்லாம் ரெம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க, எங்களுக்கு அவ்ளோ பத்தாதுன்னு சொல்ல வரீங்க, அப்படி தானே" என அவள் கோபமாய் சீற

"ஸ்டாப் இட், டோண்ட் புட் வோர்ட்ஸ் இன் மை மௌத்... உன்கிட்ட பேச முடியாது ச்சே" என சலிப்பாய் நகர்ந்தான்

"ஆமா என்கிட்டயெல்லாம் பேச முடியாது. உங்க டீம்ல இருக்காளே அவ பேரென்ன... நின்னாவோ உக்காந்தாவோ, அவகிட்ட பேசறதுன்னா மட்டும் இனிக்கும்" என கழுத்தை நொடித்தாள்

"அது நின்னாவும் இல்ல உக்காந்தாவும் இல்ல நீனா" என பற்களை கடித்தான் எரிச்சலில்

"அது ரெம்ப முக்கியம் இப்ப... நீங்க லீவ் போட முடியுமா முடியாதா?" என அவள் பிடிவாத குரலில் கேட்கவும்

"அட்ஜஸ்ட் பண்ண பண்ண ஓவரா டாமினேட் பண்றா, திமிரு" என மனதிற்குள் எரிச்சல்பட்டவன் "முடியாது" என ஒரே வார்த்தையில் எழுந்து சென்றான்

அதன் பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரவு உணவின் போது கூட மௌனமே ஆட்சி செய்தது

பின் அவன் இருப்பையே உணராதவள் போல் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அறைக்குள் செல்ல, "நானும் உனக்கு சளைத்தவனல்ல" என்பது போல் அவன் முன்னறையில் லேப்டாப் சகிதம் இல்லாத வேலையில் மூழ்கினான்

நடுஇரவில் அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் பாவனையில் கண் மூடினாள். மெல்லிய படலம் போல் அவன் அவளை பார்ப்பதை உணர்ந்தும் கண் திறக்காமல் இருந்தாள்

மெல்ல அவளருகே குனிந்தவன் "ராட்சசி... பேசறதெல்லாம் பேசிட்டு கொழந்த மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு தூங்கரத பாரு" என மெல்ல முணுமுணுத்தபடி, அவளை எழுப்பி விடாவண்ணம் மெல்ல நெற்றியில் இதழ் ஒற்றினான்

"உறங்குவது போல் நடித்தேன்
  உன்ரகசிய நாடகத்தை ரசிக்க"
என இன்ஸ்டன்ட் ஹைக்கூ உதித்தது அவள் மனதில்

திறக்க துடித்த இமைகளை அடக்கி நாடகத்தை தொடர்ந்தாள், அப்படியே உறங்கியும் போனாள்

காலையில் கண் விழித்தவளுக்கு அவனின் முகதரிசனம் முன்னிரவை நினைவூட்ட "வெவ்வவெவே" என பழித்தபடி, செல்லமாய் அலுங்காமல் அவன் கேசத்தை கலைத்தாள்

அடுத்த நாள் இரவும் இதே நாடகம் தொடர்ந்தது. ஆனால் பகலில் ஜென்ம விரோதிகள் போல் முகத்தை திருப்பி கொண்டனர்

மூன்றாம் நாள் கண் விழித்ததும் இரு நாளின் வழக்கம் போல் தனிச்சையாய் அவன் முன்னுச்சி கேசத்தை கலைத்துவிட்டு விலகியவளின் கரம் பற்றினான் அவன்

"அய்யோ நாடகம் அம்பலமாகி விட்டதே" என வெட்கமும், கூடவே சிறு கோபமும் சேர "கைய விடுங்க, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்" என கையை உதறினாள்

"நான் கூட ரெம்ப கோவமாத்தான் இருக்கேன்" என்றான் அவனும்

"எதுக்கு?" என முறைத்தாள்

"ம்... தூங்கற மாதிரி நடிச்சு ஏமாத்தினதுக்கு" என்றான் கேலியாய் சிரித்தபடி

"அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே" என அவள் மனதிற்குள் புலம்ப

"ஆமா, அதுவும் தெரிஞ்சு போச்சு" என்றான் அவள் மனதை படித்தது போல்

"எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு" என அவன் பிடியில் இருந்து ஓட விழைந்தவளை அருகே இழுத்தவன்

"இன்னிக்கி நீ வொர்க் ப்ரம் ஹோம்னு எனக்கு தெரியும்... அதான் நானும் வொர்க் ப்ரம் ஹோம் சொல்லிட்டு வந்துட்டேன்" என கண் சிமிட்டினான்

"ஐயோ கடவுளே... நேத்து சாயங்காலம் அந்த நீனா என்னை பாத்து 'என்ஜாய் வொர்கிங் ப்ரம் ஹோம்'னு சிரிச்சது இதுக்கு தானா, ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?" என பொய்யாய் சலித்தாள்

"ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றதுல கூட சில அட்வான்டேஜ் இருக்கு இல்லடி"

"எனக்கு 'டி' போட்டா கோபம் வரும்"

"அப்ப காபி போடட்டுமா?" என சிரிக்க, அதற்கு மேல் நடிக்க இயலாமல் தானும் சேர்ந்து சிரித்தாள்

"ஏய்... ஒரு நியூ இயர் ரெசல்யூசன் எடுக்கலாமா?" என்றவன் கேட்க

"என்ன? இனிமே அடிக்கடி வொர்க் ப்ரம் ஹோம் பண்றதுனா?" என்றவள் சிரிக்க

"எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல" என சீண்டியவன் "இன்னொன்னும் கூட" என்றான்

"என்ன?" என அவள் புரியாமல் பார்க்க

"இந்த 2013 வருசத்துல நானும் நீயும் சண்டையே போடாம இருக்கணும். டீல்?" என அவன் கை நீட்ட

"நோ டீல்" என அவன் கையை தட்டி விட்டாள்

"அடிப்பாவி... ஏன்?" என விழிக்க

"சண்டையே இல்லைனா என்ன லைப் அது, செம போர். மாசத்துக்கு நாலு சண்டை போடணும், ரெண்டு நாள் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு யார் மொதல்ல பேசுவாங்கனு தவிக்கனும், ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் ரசிக்கணும். சண்டைய சாக்கா வெச்சு உங்ககிட்ட நாலு கிப்ட் தேத்தணும், இதெல்லாம் இல்லைனா என்ன சுவாரஷ்யம் இருக்கு லைப்ல" என அவள் அபிநயத்துடன் கூற, அதை கண்ணெடுக்காமல் ரசித்தவன்

"பொண்ணுங்க எல்லாம் பிளான் பண்ணிதான் பண்றீங்க... இது புரியாம பசங்க நாங்க பீலிங்க்ல பீஸ் பீஸா போறோம்... ஹ்ம்ம்" என பாவமாய் அவன் கூற, அதை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட சத்தமாய் வாய் விட்டு சிரித்தாள்

சிரிப்பு ஓய்ந்ததும் "ஹாப்பி நியூ இயர்... ரெண்டு நாள் அட்வான்சா சொல்றேன், ஏன்னா என்னோட விஷ் தான் உங்களுக்கு முதல் விஷ்ஷா இருக்கணும்" என்றாள் தன் உரிமையை பறைசாற்றுவது போல்

அதையும் ரசித்தவன் "ஐ லவ் யு" என்றான், அவளை விட்டு பார்வையை விலக்காமல்

"ஹாப்பி நியூ இயர் சொன்னா திருப்பி ஹாப்பி நியூ இயர் தான் சொல்லுவாங்க, ஐ லவ் யு சொல்ல மாட்டாங்க... இது கூட தெரியாதா?" என்றாள் வேண்டுமென்றே

"ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு டூ சொல்லுவாங்க, சண்டை போட மாட்டாங்க... இது கூட தெரியாதா?" என்றான் அவனும் வேண்டுமென்றே

"இப்ப யாரு சண்டை போட்டா?" என அவள் முறைக்க, மீண்டும் அங்கு ஒரு  சண்டை (!) ஆரம்பமாகியது

:)))

Friday, November 16, 2012

உனக்கும் எனக்கும்... (சிறுகதை - வல்லமை தீபாவளி சிறப்பிதழில்)

 
 
வல்லமை தீபாவளி சிறப்பிதழில் வெளியான எனது சிறுகதை இது. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவிற்கு. வல்லமையில் இதை பார்க்க இங்கே சொடுக்கவும்
____________________________________
 
"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது
 
(முற்றும்)